
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் நடந்த திருமஞ்சனத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார், திருவந்திபுரத்தில் மணவாள மாமுனிகள் கோவில் உள்ளது. இங்கு, கார்த்திகை மாத திருமூல நட்சத்திரத்தையொட்டி நேற்று காலை திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறை நடந்தது.
மாலை ஊஞ்சல் சேவை, வீதி புறப்பாடு, இரவு சாற்றுமறை நடந்தது. மூலவர் மணவாள மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

