sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க.,வுடன் 3வது முறையாக மல்லுக்கட்டும் திருமாவளவன்

/

அ.தி.மு.க.,வுடன் 3வது முறையாக மல்லுக்கட்டும் திருமாவளவன்

அ.தி.மு.க.,வுடன் 3வது முறையாக மல்லுக்கட்டும் திருமாவளவன்

அ.தி.மு.க.,வுடன் 3வது முறையாக மல்லுக்கட்டும் திருமாவளவன்


ADDED : மார் 20, 2024 11:50 PM

Google News

ADDED : மார் 20, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம், : சிதம்பரம் (தனி) தொகுதி, 2008 ல், தொகுதி மறுசீரமைப்புக்கு பின், சிதம்பரம் தொகுதி, கடலுார் மாவட்டத்தில் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி), பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள குன்னம், அரியலுார் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

இத்தொகுதியில் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் 1999 தேர்தலில் இருந்து தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வருவதால், சிதம்பரம் 'ஸ்டார்'தொகுதியாக பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக 1999 ம் ஆண்டு, பா.ம.க., பொன்னுசாமியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அடுத்து 2004 ம் ஆண்டு மீண்டும் பொன்னுசாமியிடம் தோல்வியை தழுவினார். அதன் பின்பு 3 வது முறையாக பொன்னுசாமியை வீழ்த்தி வெற்றி பெற்று சிதம்பரம் தொகுதி எம்.பி.,யனார்.

ஆனால், 2014 தேர்தலில் அ.தி.மு.க., சந்திரகாசியிடம் தோல்விவை தழுவினார். அதன்பிறகு, 2019 ல் மீண்டும் 5 வது முறையாக, அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகருடன் போராடி வெற்றி பெற்று சிட்டிங் எம்.பி., யாக உள்ளார். இந்நிலையில் வரும் தேர்தலில், அ.தி.மு.க., வுடன் நேரடியாக 3 வது முறையாக மல்லுக்கட்ட உள்ளார்.

சிதம்பரம் தொகுதிதான் ராசியான தொகுதி, இங்குதான் போட்டியிடுவேன் என, சபத்துடன் களம் இறங்கியுள்ள அவர், தொகுதி மக்களின் கேள்வி கணைகளை எப்படி சமாளிக்க போகிறார் என்பதுதான் கேள்வி.






      Dinamalar
      Follow us