ADDED : பிப் 25, 2026 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு, சிவசுப்பரமணியர் கோவிலில், 23 வது திருப்புகழ் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை, ராமகிருஷ்ண ஐயர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பண்ருட்டி மாதவன், வைத்தியநாதன், வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வடிவேலு, கலாநிதி, விஜயலட்சுமி ஆனந்த், சரஸ்வதி மோகன் உள்ளிட்ட பலர் காலை முதல் மாலை வரை திருப்புகழ் பாடி அதன் பெருமைகளை விளக்கி பேசினர். காராமணிக்குப்பம் வெங்கடரமணராஜ் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

