/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்
ADDED : நவ 28, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், உதயநிதி பிறந்தநாளையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
கடலுாரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழக துணை முதல்வர் உதயநிதி, பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்கினார்.
அமைச்சர் கணேசன், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் கதிரவன், மேயர் சுந்தரி ராஜா, மாநகர செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.