sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலில் குளித்தவர்களிடம் ரகளை; மூன்று வாலிபர்கள் கைது

/

கடலில் குளித்தவர்களிடம் ரகளை; மூன்று வாலிபர்கள் கைது

கடலில் குளித்தவர்களிடம் ரகளை; மூன்று வாலிபர்கள் கைது

கடலில் குளித்தவர்களிடம் ரகளை; மூன்று வாலிபர்கள் கைது

1


ADDED : டிச 26, 2024 07:00 AM

Google News

ADDED : டிச 26, 2024 07:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்,: கடலுார் அருகே கடலில் குளிக்க வந்தவர்களிடம், மது போதையில் தகராறு செய்த வாலிபர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நேற்று முன்தினம் மாலை புதுச்சத்திரம் அடுத்த பெரியக்குப்பம் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் நான்கு பேர் போதையில், கடலில் குளித்த பெண்கள் உள்ளிட்டோரிடம் தகராறு செய்து தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி காண்போரை அதிர்ச்சி அடைய செய்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், தியாகவல்லி லெனின் நகரை சேர்ந்த மாணிக்கவேல், 24, தினேஷ்,21, சரவணன்,22, பிரவீன்,24, ஆகிய நான்கு பேர் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்தனர். தினேஷ், மாணிக்கவேல், சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us