ADDED : டிச 03, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே மலை உச்சியில் , நாளை தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று, கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். பெரும்பாலான கோவில்களில் பின்புறம் உள்ள மலையிலேயே தீ பம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது.
நெல்லிக்குப்பம் அடுத்த திருமாணிக்குழியில் அம்புஜாட்சி உடனுறை வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் திருவண்ணாமலையில் தீபம் நடக்கும் பரணி நட்சத்திரத்தின் மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில் தீபம் திருவிழா நடைபெறுகிறது.
குறி ப்பாக, இந்த கோவில் முன் உள்ள மலையில் நாளை மாலை தீபம் ஏற்ற படுகிறது.

