/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டோனி அண்ட் கய் நிறுவன பார்லர் அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
/
டோனி அண்ட் கய் நிறுவன பார்லர் அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
டோனி அண்ட் கய் நிறுவன பார்லர் அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
டோனி அண்ட் கய் நிறுவன பார்லர் அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : டிச 25, 2024 10:59 PM

கடலுார்; கடலுாரில் டோனி அண்ட் கய் நிறுவனத்தின் சீப் அண்ட் பெஸ்ட் புதிய பார்லரை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
கடலுார் சாவடியில் டோனி அண்ட் கய் நிறுவனம் சீப் அண்ட் பெஸ்ட் ஆண்கள் மற்றும் பெண்கள் புதிய பார்லர் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, உரிமையாளர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். சேகர், சிவா, செந்தில், மதன் ஆகியோர் வரவேற்றனர். அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்லரை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது, டாக்டர் நடராஜன், புனித வள்ளலார் கல்லுாரி முதல்வர் அருமைச்செல்வம், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், தி.மு.க., நிர்வாகி கலையரசன், முன்னாள் கவுன்சிலர் ரவிராஜன், தயாளன், முருகன், கார்த்திக், அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.