ADDED : செப் 24, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : வி.சி., கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான கடிதத்தை துணை மேயரிடம் வழங்கப்பட்டது.
கடலுார் மாநகர துணைமேயர் தாமரைச்செல்வன், வி.சி.,கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்கம் என்பதற்கான கடிதத்தை, கடலுாரிலுள்ள தனியார் நிறுவன பொதுமேலாளர் கண்ணபிரானிடம் வழங்கினார்.
அதை ஏற்று சங்கத்தின் சிறப்பு தலைவர் தாமரைச்செல்வனுக்கு, நிறுவனம் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தொழிற்சங்கத்தின் தலைவர் வேல்முருகன், செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் சங்கர், மாவட்ட அமைப்பாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.