/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குளத்தில் குளித்த மாணவர் மாயம்; நெல்லிக்குப்பம் அருகே சோகம்
/
குளத்தில் குளித்த மாணவர் மாயம்; நெல்லிக்குப்பம் அருகே சோகம்
குளத்தில் குளித்த மாணவர் மாயம்; நெல்லிக்குப்பம் அருகே சோகம்
குளத்தில் குளித்த மாணவர் மாயம்; நெல்லிக்குப்பம் அருகே சோகம்
ADDED : டிச 06, 2024 06:55 AM

நெல்லிக்குப்பம்: குளத்தில் குளித்தபோது மாயமான மாணவரை பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலுார் அடுத்த கோண்டூரை சேர்ந்தவர் குரு மகன் கதிர்,17: கடலுார் அரசு ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் நேற்று காலை ஐ.டி.ஐ.,க்கு சென்றவர், தனது நண்பர்கள் 5 பேருடன் தோட்டப்பட்டு, ஆஞ்சநேயர் கோவில் எதிரில் உள்ள குளத்தில் குளிக்க சென்றனர்.
குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்ததால், கதிர் உள்ளிட்ட மூன்று பேர் மட்டும் குளத்தில் குளிக்க இறங்கினர். அப்போது, கதிர் மட்டும் குளத்தில் மூழ்கினார்.
அதனைக்கண்ட சக இரு மாணவர்கள் கரையேறிவிட்டனர். தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான குழுவினர் வெகுநேரம் தேடியும் கதிரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து பேரீடர் மீட்பு குழுவினர் மாலை 8:30 மணிவரை தேடியும் கதிரை காணவில்லை.
இந்நிலையில் மாணவர் கதிரை கண்டுபிடிக்காததை கண்டித்து அவரது உறவினர்கள் கடலுார் -பண்ருட்டி சாலையில் மாலை 6.30 முதல் 7.00 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.