sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் விபத்தில் ஏட்டு பலி வேப்பூர் அருகே சோகம்

/

பைக் விபத்தில் ஏட்டு பலி வேப்பூர் அருகே சோகம்

பைக் விபத்தில் ஏட்டு பலி வேப்பூர் அருகே சோகம்

பைக் விபத்தில் ஏட்டு பலி வேப்பூர் அருகே சோகம்


ADDED : அக் 02, 2025 01:55 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தலைமை காவலர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடலைச் சேர்ந்தவர் கலையராஜா, 38. இவர் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். கடந்த மாதம் 21, 22 ஆகிய இரு நாட்கள் விடுப்பில் இருந்தார். அப்போது, 21ம் தேதி தனது டி.என். 91 - டி. 1533 பதிவெண் கொண்ட பைக்கில் தாழநல்லுாரில் இருந்து விருத்தாசலம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தாழநல்லுார் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கலையராஜா பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4:30 மணியளவில் இறந்தார்.

இது குறித்து கலையராஜா மனைவி சரண்யா கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us