/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமியிடம் ஆபாச பேச்சு வயதான தம்பதி மீது போக்சோ
/
சிறுமியிடம் ஆபாச பேச்சு வயதான தம்பதி மீது போக்சோ
ADDED : அக் 02, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே 13வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக வயதான தம்பதி மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி,60. இவர் தனது மனைவியுடன் அதே பகுதியில் கடந்த 7ம் தேதி ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற 13வயது சிறுமியை முதியவர் ஆபாசமாக பேசினார். இதுகுறித்து புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார், சுப்ரமணி மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.