sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

/

கடலுாரில் ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கடலுாரில் ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கடலுாரில் ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு


ADDED : செப் 02, 2025 03:39 AM

Google News

ADDED : செப் 02, 2025 03:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: அனைத்துக் கட்சி சார்பில் திருப்பாதிரிப்புலியூரில் வரும் 3ம் தேதி நடக்க இருந்த ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கடலுார் திருப்பாப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷன் பெயரை கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷன் என பெயர் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ.,-இந்திய கம்யூ., காங்.,-வி.சி., ம.தி.மு.க., மற்றும் பொது நல அமைப்பு சார்பில் நாளை 3ம் தேதி காலை 10:00 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடலுாரில் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தாசில்தார் மகேஷ், டி.எஸ்.பி.,ரூபன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளாத காரணத்தால் வரும் 9ம் தேதி மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஆர்.டி.ஒ., அபிநயா தெரிவித்தார்.

இதன் காரணமாக நாளை 3ம் தேதி நடக்க இருந்த மறியல் போராட்டம் 15ம் தேதிக்கு ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us