/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை; ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்
/
மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை; ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்
மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை; ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்
மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை; ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்
ADDED : அக் 07, 2025 12:34 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு மொபைல் போன் வெளிச்சத்தில் பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆர ம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 5 டாக்டர்கள், 5 செவிலியர்கள், 2 உதவியாளர்கள் உள்ளனர். சுகாதார நிலையத்தில் 7 படுக்கைகள் கொண்ட கர்ப்பிணி வார்டுகள் உள்ளன.
இங்கு, 100க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். சுகாதார நிலையத்தில் புறநோயாளி பரிசோதனை பகுதிக்கு 1 இன்வெர்ட்டரும, கர்ப்பிணி வார்டுக்கு 1 இன்வெர்ட்டர் மற்றும் ஜெனரேட்டர் வசதி உள்ளன.
அதில், இரு இன்வெர்ட்டரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழுதானது. இதுவரை சீரமைக்கவில்லை. நேற்று காலை 10:00 மணிக்கு பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏ.பி., சுவிட்ச் பழுதானது.
அதனை மாற்றியமைக்க மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், சுகாதார நிலையத்தில் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை மின்தடை ஏற்பட்டது.
அப்போது, சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த டாக்டர்கள், நோயாளிகளுக்கு மொபைல் போன் வெளிச்சத்தில் பரிசோதனை செய்து, ஊசி செலுத்தினர். இதனால், நோயாளிகள் அவதி யடைந்தனர்.