/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா
/
வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா
ADDED : செப் 19, 2024 11:46 PM

விருத்தாசலம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விருத்தாசலம் அடுத்த தொரவளூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், விருத்தாசலம் வனத்துறை அலுவலகம் சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமை தாங்கினார்.இதில், வனவர்கள் சிவகுமார், சஞ்சீவி, வனக்காப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுத பிரியன், ஊராட்சி தலைவர் சங்கீதா அருளரசன், ஊராட்சி துணைத்தலைவர் சிவச்செல்வி தென்றல்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருளரசன்,பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் தென்றல் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி வளாகத்தில், வேம்பு, நாவல், மயில்கொன்றை, மஞ்சல்கொன்றை, புங்கமரம், பூவரசு, புளி, நீர்மருது, இலுப்பை, பாதாம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது.