sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலம் சேமிப்பு கிடங்கை லாரி உரிமையாளர்கள் முற்றுகை

/

விருத்தாசலம் சேமிப்பு கிடங்கை லாரி உரிமையாளர்கள் முற்றுகை

விருத்தாசலம் சேமிப்பு கிடங்கை லாரி உரிமையாளர்கள் முற்றுகை

விருத்தாசலம் சேமிப்பு கிடங்கை லாரி உரிமையாளர்கள் முற்றுகை


ADDED : ஏப் 24, 2025 06:59 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் அரசியல் கட்சியினர் ஆதரவுடன் கனரக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் போக்குவரத்து ஒப்பந்தாரர்கள் இயக்க பணிக்கு எங்களது லாரி உரிமையாளர்கள் சங்கத்தையும் பயன்படுத்த வேண்டும் என கடலுார் மாவட்ட கனரக லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அப்போதைய தாசில்தார் உதயகுமார் தலைமையில் சமாதானக்கூட்டம் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கு முன் நேற்று பகல் 11:00 மணியளவில், சங்கத் தலைவர் பிரகாஷ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் கழுத்தில் துாக்கு கயிறு மாட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதற்கு தீர்வு காணாவிட்டால் அரசியல் கட்சிகளின் ஆதரவோடு பாலக்கரை ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால், கடலுார் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us