ADDED : ஆக 31, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கூழாங்கல் கடத்தி சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமம் அருகே ஈச்சர் லாரியும், கூழாங்கல் ஏற்றி சென்ற லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சென்ற விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையிலான போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், விபத்துக்குள்ளான லாரி, அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து கூழாங்கல் கடத்தி சென்ற லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
