ADDED : டிச 25, 2024 08:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : குமராட்சி கடைவீதியில் போதையில் பொதுமக்களை அச்சுறுத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி வ.உ.சி நகர் ராமர் மகன் சந்துரு, 25; வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் 40; இருவரும் நேற்று போதையில் குமராட்சி கடைவீதியில் கையில் உருட்டுக் கட்டையுடன் அவ்வழியாக சென்ற பொதுமக்களை திட்டி, ரகளையில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குமராட்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போதை ஆசாமிகள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

