sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஹவாலா பணம் பிரிப்பதில் பிரச்னை வாலிபரை கடத்திய 2 பேர் கைது

/

ஹவாலா பணம் பிரிப்பதில் பிரச்னை வாலிபரை கடத்திய 2 பேர் கைது

ஹவாலா பணம் பிரிப்பதில் பிரச்னை வாலிபரை கடத்திய 2 பேர் கைது

ஹவாலா பணம் பிரிப்பதில் பிரச்னை வாலிபரை கடத்திய 2 பேர் கைது


ADDED : செப் 11, 2025 03:18 AM

Google News

ADDED : செப் 11, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே ஹவாலா பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, இருவரை கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பேர்பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் அசோக்குமார்,24. இவரது வங்கி கணக்கிற்கு கடந்தாண்டு கடலுார் செம்மங்குப்பம் அருண்குமார், விருத்தாசலம் அடுத்த புதுகூரைபேட்டை கலைச்செல்வன் ஆகியோர் மூலம் ஹவாலா பணம் முதலில் 2.50 கோடி, பின்னர் 4.50 கோடி வந்தது.

அதில் 2.50 கோடியை அசோக்குமார், அருண்குமாரிடம் கொடுத்துள்ளார். மீதி உள்ள 4.50 கோடியை மூவரும் பிரித்துக்கொள்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் அசோக்குமார், நண்பர் தினேஷ்குமாருடன் புதுச்சேரியில் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், இதையறிந்த கலைச்செல்வன், பேர்பெரியாங்குப்பத்தை சேர்ந்த தணிகைசெல்வத்திடம் கலைச்செல்வன் என்பவரிடம், அசோக்குமார், தினேஷ்குமார் இருவருக்கும் மது வாங்கி கொடுத்து, பைக்கில் ஒதியடிக்குப்பம் வழியாக அழைத்து வரும்படி கூறி உள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை 2:15 மணிக்கு ஒதியடிக்குப்பம் அருகே அழைத்து வந்தபோது கலைச்செல்வன், நெய்வேலி அகிலன், நித்திஷ், அருண்குமார், மருங்கூர் தோப்புக்கொல்லையை சேர்ந்த பாலஸ்ரீதரன் உள்ளிட்டோர் சேர்ந்து அசோக்குமாரை கடத்தி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் கலைச்செல்வன், அகிலன், தணிகைசெல்வன், அருண்குமார், பாலஸ்ரீதரன், நித்திஷ் ஆகிய 6 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்தனர். தணிகைசெல்வன்,22; நித்திஷ்,20; ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

பணம் எப்படி வந்தது

பணம் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் கடத்தல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு அதிக ,பணம் எங்கிருந்து வந்தது, யார் அனுப்பினர், எதற்காக இவ்வளவு பெரிய தொகையை பிரித்துக்கொள்கின்றனர் என போலீசாரோ அல்லது வங்கி அதிகாரிகளோ விசாரிக்காமல் உள்ளது புரியாத புதிராக உள்ளது.








      Dinamalar
      Follow us