sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபரை கத்தியால் குத்திய கஞ்சா ஆசாமிகள் 2 பேர் கைது

/

வாலிபரை கத்தியால் குத்திய கஞ்சா ஆசாமிகள் 2 பேர் கைது

வாலிபரை கத்தியால் குத்திய கஞ்சா ஆசாமிகள் 2 பேர் கைது

வாலிபரை கத்தியால் குத்திய கஞ்சா ஆசாமிகள் 2 பேர் கைது


ADDED : நவ 02, 2025 03:38 AM

Google News

ADDED : நவ 02, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த தில்லை நாயகபுரத்தை சேர்ந்த சேகர் மகன் அறிவழகன், 29; நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் ஒருவருடன், ஞான விநாயகர் கோவில் தெருவில் உள்ள கடைக்கு சென்றார்.

அங்கு கஞ்சா போதையில் வந்த உடையார்குடி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் சஞ்சய், 23; செந்தில் வேல் மகன் சக்திவேல்; தீதம்பாளையம் நடராஜன் மகன் மணிகண்டன், 29; ஆகிய மூவரும் முன்விரோதம் காரணமாக அறிவழகனிடம் தகராறு செய்தனர்.

இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் உள்ளிட்ட மூவரும் அறிவழகனை தாக்கினர். பின்னர் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து அறிவழகன் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

இதில் அறிவழகன் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயம் அடைந்த அறிவழகனை சிகிச்சைக்கு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் பதுங்கி இருந்த சஞ்சய், 23; மணிகண்டன், 29; இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us