ADDED : ஜன 02, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்:கடலுார் மாவட்டம், நெய்வேலி மெயின் ரோட்டை சேர்ந்தவர் கிஷோர்குமார், 26, சென்னையில் தனியார் நிறுவன பணியாளர்.
இவர், நெய்வேலியில் வீட்டிலிருந்து நேற்று சென்னைக்கு பைக்கில் புறப்பட்டார். பகல் 3:30 மணிக்கு திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள விளங்கம்பாடி கிராமத்தின் அருகே சென்றார்.
சாலையை கடக்க முயன்ற விளங்கம்பாடி விவசாயி ஜெயராமன், 65, மீது பைக் மோதியது.
ஜெயராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த கிஷோர்குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், அவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மயிலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

