ADDED : நவ 18, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: முன்விரோதம் காரண மாக தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டிச்சாவடி, பெரிய காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் மகன் விமல், 24; இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் செல்வகுமார், 20; என்பவர் தரப்புக்கும் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் பேனர் வைத்தது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு மீண்டும் தாக்கிக் கொண்டனர். இதில், காயமடைந்த விமல், கடலுார் அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார்.
இருதரப்பு புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார், செல்வகுமார், செல்வம் மகன் முகேஷ், கிருஷ்ணராஜ் மகன் விஷால், 20; ஆகியோரை கைது செய்தனர். விமல், கங்காதரன் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

