ADDED : ஜன 19, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மது பாட்டில்களை பதுக்கி விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, கார்குடல் பிள்ளையார் கோவில் அருகே மதுவிற்ற அன்பழகன் மகன் மணிகண்டன், 25; படுகளாநத்தம் ஏரிக்கரையில் மதுவிற்ற சிவசண்முகம் மகன் கவுசிக், 19;ஆகியோரை கைது செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களிடம் இருந்து தலா 10 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

