sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மது பழக்கத்தால் இரண்டு பேர் சாவு

/

மது பழக்கத்தால் இரண்டு பேர் சாவு

மது பழக்கத்தால் இரண்டு பேர் சாவு

மது பழக்கத்தால் இரண்டு பேர் சாவு


ADDED : ஜன 10, 2025 06:26 AM

Google News

ADDED : ஜன 10, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடியில் குடிப்பழக்கம் காரணமாக இரண்டு பேர் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் முதுநகர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம்,65. குடிப்பழக்கம் உள்ளவர். நேற்று முன்தினம் மாலை மதுபோதையில், தொண்டமாநத்தம் ரேஷன்கடை அருகே மயங்கி கிடந்தவரை,மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

இதேபோல், குறிஞ்சிப்பாடி அடுத்த அயன்குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் முருகவேல்,49. குடிப்பழக்கம் உள்ளவர். இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் மாலை மதுகுடித்துவிட்டு வந்தவரை மனைவி தட்டிக்கேட்டார். அதில் கோபமடைந்தவர், ஆடூர்அகரம் பரவனாறு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்தவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us