sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தனித்தனியே விபத்து: 2 பேர் பலி

/

தனித்தனியே விபத்து: 2 பேர் பலி

தனித்தனியே விபத்து: 2 பேர் பலி

தனித்தனியே விபத்து: 2 பேர் பலி


ADDED : ஜூலை 25, 2025 02:43 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: தனித்தனியே நடந்த சாலை விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.

விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 63; விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில், கொடுக்கூரில் இருந்து, விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் அருகே வந்த போது, எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம், சுப்ரமணியன் பைக் மீது மோதியது. இதில், அவர் படுகாயமடைந்தார்.

உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்,52; நேற்று முன்தினம் பைக்கில் விருத்தாசலத்தில் இருந்து சிறுவரப்பூர் சென்றார். சிறுவரப்பூர் பஸ் நிறுத்தம் அருகே செ ன்ற போது, பின்னால் வந்த கார் மோதியதில் கமலக்கண்ணன் இறந்தார். புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us