ADDED : நவ 19, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி; குள்ளஞ்சாவடி அடுத்த, திம்மராவுத்தன்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் ஜானகிராமன், 19. இவரது சகோதரி சங்கீதா, 23. இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் அதே பகுதி மெயின் ரோட்டில் சென்றனர். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில், கீழே விழுந்த இருவரும் பலத்த காயமடைந்தனர். உடன் அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, டிராக்டர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, பண்ருட்டி, அன்னங்காரன்குப்பத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.