/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியில்லாத கட்டடம் விருதையில் இடித்து அகற்றம்
/
அனுமதியில்லாத கட்டடம் விருதையில் இடித்து அகற்றம்
ADDED : ஜூன் 21, 2025 12:51 AM

விருத்தாசலம்: உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், விருத்தாசலத்தில் நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை, அதிகாரிகள் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் பாலக்கரை அருகே நகராட்சி அனுமதியின்றி, ரமேஷ் என்பவர் புதிதாக கட்டடம் கட்டியுள்ளார். இதுகுறித்து, விருத்தாசலத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதன்பேரில், கடந்த மாதம் கட்டடத்திற்கு 'சீல்' வைக்க நகராட்சி நிர்வாகத்திற்கு , சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து. நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமையில், நகரமைப்பு அலுவலர் செல்வம், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்திற்கு, கடந்த மாதம் 26ம் 'சீல்' வைத்தனர்.
மேலும், இந்த கட்டடத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் இடித்து அகற்றவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை கட்டட உரிமையாளர் இடித்து அகற்ற முன்வராததால், நகராட்சி அதிகாரிகள் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.