ADDED : ஜன 13, 2024 07:27 AM

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்கக் கவச அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு 11:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அங்காளம்மனை மேள, தாளம் முழங்க ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர்.
அங்கு நடந்த தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். இரவு 12:00 மணிக்கு மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.
கலெக்டர் பழனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.