ADDED : ஜூலை 31, 2025 10:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; அடையாளம் தெரியாத முதியவர் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த பெரியகாட்டுப்பாளையம் நல்ல தண்ணீர் ஆற்றுப்பாலம் அருகே கடந்த 26ம் தேதி 45 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிக் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் வெள்ளை, பச்சை, நீல நிறம் கலந்த கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார்.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.