ADDED : செப் 01, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: அடையாளம் தெரியாத சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார், புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவில் அருகே கடந்த 26ம் தேதி 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி நிலையில் கிடந்தார். அவ்வழியாக சென்ற கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன், முதியவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். முதியவர் 27ம் தேதி இறந்தார்.
இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.