ADDED : அக் 04, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நிழற்குடையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இறந்தவர் நீலம், காப்பி நிற கைலி அணிந்திருந்தார். இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.
பெண்ணாடம் போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.