ADDED : ஜூலை 29, 2025 10:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுாரில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார், வெளிச்செம்மண்டலம் ஹவுசிங் போர்டு பகுதியில் நேற்று காலை 60 வயது மதிக்கத் தக்க முதியவர் மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் கடலுார் அரசு மருத்துவமனை அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவர் இறந்தார்.
இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. புகாரின் பேரில் கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.