ADDED : ஆக 01, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: அடையாளம் தெரியாத முதியவர் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புவனகிரி பஸ் நிறுத்தம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வி.ஏ.ஓ., சுரேந்திரன் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.