sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம்: கலெக்டர் ஆய்வு

/

 வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம்: கலெக்டர் ஆய்வு

 வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம்: கலெக்டர் ஆய்வு

 வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம்: கலெக்டர் ஆய்வு


ADDED : நவ 20, 2025 05:47 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: பண்ருட்டி தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூலம் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பண்ருட்டி தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் பணியினை கலெக்டர்சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

இதையடுத்து அவர் கூறியதாவது:

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் கடந்த 4 ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளாக 2,313 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது.

வாக்காளர்களுக்கு அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற்று அதனை தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அலுவலர்கள் பெறப்பட்ட படிவங்களை அவர்களே நேரடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை செய்து வருகிறார்கள்.

இப்பணியினை எளிதாக செய்யும் வகையில் கூடுதலாக ஊரக வளர்ச்சித் துறை, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

வாக்காளர்கள் படிவத்தினை பூர்த்தி செய்திடும் போது அவர்களுக்கு எழும் சந்தேகங்களை சரியாக பூர்த்தி செய்திட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணியினை சரியான கால அளவில் நிறைவு செய்திடும் வகையில் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் இதுகுறித்து சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட படிவங்களின் எண்ணிக்கை, வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட படிவங்கள், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள் எண்ணிக்கை, வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைப் படிவங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலர்களும் இப்பணியின் முக்கியத்துவம் குறித்து அறிந்து மிக கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், கலெக்டர்நேர்முக உதவியாளர் சண்முகவள்ளி, விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, கடலுார் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us