sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

/

நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

2


ADDED : மே 16, 2025 10:27 PM

Google News

ADDED : மே 16, 2025 10:27 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்,68; இவர், அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்தை அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார்.

அதன்பேரில், நிலத்தை அளவீடு செய்ய தொரவளூர் வி.ஏ.ஓ.,வான பண்ருட்டி, எல்.ஆர்.,புரம் தனசேகர்,33; ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து வேலாயுதம், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தலின் பேரில், நேற்று மதியம் 2:00 மணிக்கு வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த தனசேகரிடம், ரசாயனம் தடவிய பணத்தை, வேலாயுதம் கொடுத்தார்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையிலான போலீசார், தனசேகரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us