ADDED : ஆக 18, 2025 12:52 AM

கடலுார்; கடலுார் மற்றும் குள்ளஞ்சாவடியில் வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., பிறந்த நாள் விழா நடந்தது.
கடலுார் அரசு மருத்துவமனையில் துணை மேயர் தாமரைச்செல்வன், நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
மாநகர மாவட்ட செயலாளர் செந்தில், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், நகர செயலாளர் செங்கதிர், துணை செயலாளர் சிலம்பு, மாவட்ட செய்தி தொடர்பாளர் பால புதியவன், மாவட்ட அமைப்பாளர் துாயவன், ஜெயக்குமார் பங்கேற்றனர்.
குள்ளஞ்சாவடியில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அம்பேத், குறிஞ்சிப்பாடி ஒன்றிய பொருளாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினர். துணை மேயர் தாமரைச்செல்வன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாநில துணை செயலாளர் ஜான்சன், ஒன்றிய செயலாளர் இளையராஜா, பாலகிருஷ்ணன், நகர பொருளாளர் சுமன் பிரபு, ராபர்ட் பங்கேற்றனர்.
சென்னையில் நடந்த விழாவில் திருமாவளவன் எம்.பி.,க்கு துணை மேயர் தாமரைச்செல்வன் வாழ்த்து தெரிவித்தார்.