ADDED : ஆக 18, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி; குறிஞ்சிப்பாடியில் வி.சி., கட்சி பேனர் அகற்றியதை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி அக்கட்சியினர் குறிஞ்சிப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகில் பேனர் வைத்தனர். இதனை போலீசார் நேற்று அகற்றினர். இதனை கண்டித்து வி.சி., கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் 9:25 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று, 10:25 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக கடலுார்-விருத்தாசலம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

