ADDED : ஏப் 09, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் வி.சி.,கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர மாவட்டசெயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர்கள் தமிழ்ஒளி, நீதிவள்ளல், மணவாளன், திராவிடமணி, மண்டல செயலாளர் ராஜ்குமார், துணை செயலாளர் முருகையன், அய்யாயிரம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதவை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.