/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீரமுடையாநத்தம் கோவில் கும்பாபிேஷகம்
/
வீரமுடையாநத்தம் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : மார் 20, 2024 11:49 PM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்மன், விநாயகர், முருகன், ஐயப்பன், நவக்கிரகங்கள், ஐயனார், செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான சன்னதிகள் உள்ளன. இக்கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
முத்துமாரியம்மன்கோவில் விமான கலத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்து. பின்னர் ஆலயத்திற்குள் உள்ள மூலவர் முத்துமாரியம்மன், பரிவார தெய்வங்களுககு கும்பாபிேஷகம் நடந்தது.
வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று தரிசனம் செய்தார். அவருக்கு, கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் சிட்டிபாபு தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது.
விழாவில், அரசு தரப்பு வழக்கறிஞர் பழனிமனோகரன் மற்றும் இளங்கோவன், மதியழகன், சங்கர், பாலமுருகன், வளையமாதேவி சண்முகம், ராஜா, கவுன்சிலர் தங்கமணி, மின்வாரிய விடுதலை முன்னனி மாவட்ட செயலாளர் தமிழ்மணி, ஊராட்சி துணைத் தலைவர் செல்வராசு, குபேந்திரன், வையாபுரி, சேகர் மற்றும் கிராம பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

