sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காடாம்புலியூர் சார் பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் மீது விஜிலென்ஸ் போலீஸ் வழக்கு

/

காடாம்புலியூர் சார் பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் மீது விஜிலென்ஸ் போலீஸ் வழக்கு

காடாம்புலியூர் சார் பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் மீது விஜிலென்ஸ் போலீஸ் வழக்கு

காடாம்புலியூர் சார் பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் மீது விஜிலென்ஸ் போலீஸ் வழக்கு


ADDED : செப் 19, 2024 01:28 AM

Google News

ADDED : செப் 19, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பண்ருட்டி அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்றதாக, சார் பதிவாளர் உட்பட 5 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 16ம் தேதி கடலுார் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சத்தியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் உள்ளிட்ட போலீசார், சோதனை செய்தனர். அப்போது பத்திரப் பதிவு செய்பவர்களிடம் லஞ்சமாக பெற்று கம்ப்யூட்டர் ரூம், ஆவண எழுத்தர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து ஆய்வுக் குழு ஆய்வாளர் சுஜாதா கொடுத்த புகாரின் பேரில், பொறுப்பு சார் பதிவாளர் வேல்விழி, 55; ஆவண எழுத்தர்கள் கதிர்காமன், கலைவாணி, 47; வைத்தியலிங்கம், 50; இடைத்தரகர் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஆகிய 5 பேர் மீது கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us