ADDED : நவ 12, 2025 07:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மாவட்டத்தில் நடந்த கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 978 பேர் எழுதினர்.
கடலுார் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில், கடலுார், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ் ணம் உள்ளிட்ட 4 மையங்களில் தேர்வு நடந் தது.
தேர்வு எழுத கடலுாரில் 674 பேர், புவனகிரியில் 240, ஸ்ரீமுஷ்ணத்தில் 26, காட்டுமன்னார்கோவிலில் 386 பேர் என, மொத்தம் 1,326 பேர் விண்ணப்பித்தனர். இதில், 4 மையங்களிலும் 978 பேர் தேர்வு எழுதினர். 348 பேர் தேர்வு எழுதவில்லை.

