sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கோவிலை இடிக்க கூடாது : கிராம மக்கள் கோரிக்கை

/

 கோவிலை இடிக்க கூடாது : கிராம மக்கள் கோரிக்கை

 கோவிலை இடிக்க கூடாது : கிராம மக்கள் கோரிக்கை

 கோவிலை இடிக்க கூடாது : கிராம மக்கள் கோரிக்கை


ADDED : டிச 30, 2025 04:04 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடிக்கக்கூடாது என கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

விருத்தாசலம் - தொழுதுார் (ராமநத்தம்) நெடுஞ்சாலை வழியாக தினசரி கனரக வாகனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. வாகன போக்குவரத்திற்கு ஏற்ப சாலை வசதியில்லாததால் இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

எனவே, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதையேற்று, கடந்த ஏப்ரல் மாதம் விருத்தாசலம் - தொழுதுார் நெடுஞ்சாலையை நான்குவழி சாலையாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது.

அதன்படி, திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் அரங்கூர் வரையிலான 10 கி.மீ., துாரத்திற்கு 70 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் துவங்கியது.

இதற்காக சாலையோர மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், திட்டக்குடி அடுத்த ஆ.பாளையம் கிராமத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் போது, அங்குள்ள கோவிலை இடிக்கக்கூடாது என கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் புனிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us