/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குளத்தில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை
/
குளத்தில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை
ADDED : டிச 30, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள குளத்தில் நேற்று அழுகிய நிலையில் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்தது.
பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கொத்தட்டை வி.ஏ.ஓ., சிவராமன் அளித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார், வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

