sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்விளக்கு அமைக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு

/

மின்விளக்கு அமைக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு

மின்விளக்கு அமைக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு

மின்விளக்கு அமைக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மே 22, 2025 11:26 PM

Google News

ADDED : மே 22, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: சிறுவரப்பூர் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்திட கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் பஸ் நிறுத்தம் உள்ளது.

இதன் மூலம் சிறுவரப்பூர், பெரியகோட்டிமுளை, சின்னகோட்டிமுளை, ஓட்டிமேடு, பெருந்துறை, பெறுவரப்பூர், கிளிஞ்சல்மேடு உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர்.

இங்கிருந்து விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, சிதம்பரம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இரவு நேரத்தில் மின் விளக்கு வசதியின்றி இருளில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.

பள்ளி, கல்லுாரி முடிந்து வரும் மாணவிகள், வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

தவிர, தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் தெரியாமல், சாலையை கடக்கும் கிராம மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

எனவே, சிறுவரப்பூர் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகள் மற்றும் சோலார் விளக்குகள் பொறுத்த வேண்டும் என 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us