/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுப்பொலிவுடன் விருதை ரயில் நிலையம்
/
புதுப்பொலிவுடன் விருதை ரயில் நிலையம்
ADDED : பிப் 05, 2025 06:28 AM

சென்னை - திருச்சி ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், தேஜஸ், வந்தே பாரத் என 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. மும்பை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநில, மாவட்டங்களுக்கும் ரயில் வசதி உள்ளது.
இதனால் கடலுார், பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்ட மக்கள் பயனடைகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் 525 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 9 கோடி ரூபாயில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அலங்கார முகப்பு, நவீன டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வறை, 4 நடைமேடைகளிலும் மேற்கூரை, இருக்கைகள், குடிநீர், கழிவறைகள், சிக்னல் அறை, சிசிடிவி கேமராக்கள் ஆகிய வசதிகள் தன்னிறைவாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ஓரிரு வாரங்களில் இப்பணிகள் முழுமையடைந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். விருத்தாசலம் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பிரமாண்டமாக உருவாகி வரும் ரயில் நிலைய திறப்பு விழாவிற்கு, பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.