sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் அம்பத்துாரை சேர்ந்தவரா

/

ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் அம்பத்துாரை சேர்ந்தவரா

ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் அம்பத்துாரை சேர்ந்தவரா

ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் அம்பத்துாரை சேர்ந்தவரா


ADDED : ஆக 18, 2025 04:16 AM

Google News

ADDED : ஆக 18, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: ஹவுரா - திருச்சி (12663), ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 15ம் தேதி இரவு 12:30 மணிக்கு, உளுந்துார் பேட்டை ரயில்வே ஸ்டேஷனை கடக்கும்போது, 20 வயது மதிக்கத்தக்க வாலிபர், ரயிலின் குறுக்கே சென்றுள்ளார். ரயிலில் சிக்கிய வாலிபர், மேப்புலியூர் ரயில்வே ஸ்டே ஷன் வரையில் 5 கி.மீட்டர் துாரத்திற்கு ரயில் இன்ஜினில் சிக்கியபடி, இழுத்து வரப்பட்டார்.

தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ் பெக்டர் சின்னப்பன் தலைமை யிலான போலீசார் சென்று, உடலை மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் பேண்ட் பாக்கெட்டில் அம்பத்துார் - விழுப்பு ரம் வரை பஸ் டிக்கெட் இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தபோது, உளுந்துார் பேட்டை டோல்கேட்டில் இருந்து வாலிபர் ஒருவர், ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து வருவது உறுதியானது.

அவர், இறந்து கிடந்த வாலிபர் தோற்றத்தில் இருப்பதால், அம்பத் துாரில் இருந்து விழுப்புரம் பஸ்சில் வந்து, உளுந்துார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் தற்கொலை செய்த கொண் டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us