ADDED : பிப் 16, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் முதுநகர் அருகே கார் மோதி வாட்ச்மேன் இறந்தார்.
கடலுார் முதுநகர் அடுத்த சுத்துகுளத்தைச் சேர்ந்தவர் கணபதி, 60; இவர், தனியார் பாத்திரக்கடை ஒன்றில் வாட்ச்மேனாக பணிபுரிந்தார். கடந்த 13ம் தேதி நள்ளிரவு பணியில் இருந்தபோது, சிதம்பரம் செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அவ்வழியே சென்ற கார் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து இறந்தார்.
கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

