ADDED : அக் 09, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வெள்ளாறு ஏ.டி.சி., மதகிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில், காவிரி டெல்டா கடைமடை பாசன பகுதிகளான சேத்தியாத்தோப்பு, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீராணம் ஏரி வெள்ளாறு பாசனம் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா நடவு, நேரடி விதைப்பு செய்துள்ளனர். கடும் வெயிலால் நெற்பயிர்கள் கருகுவதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதையடுத்து, சிதம்பரம் கொள்ளிட வடிநில கோட்ட செயற்பொறியாளர் காந்தரூபன் உத்தரவின்பேரில் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு தலைமுகப்பு ஏ.டி.சி., மதகிலிருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்து அரியகோஷ்டி, மானம்பார்த்தான், பழைமுரட்டு வாய்க்காலில் பாசனத்திற்கு அனுப்பினர்.

