/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மலையாண்டர் கோவிலில் திருக்கல்யாணம்
/
மலையாண்டர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : நவ 27, 2025 04:50 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில், 9 ம்ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண விழா நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு யாகவேள்விகள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
மதியம் விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பரமணியர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், சண்டிகேஸ்வரர், தனி அம்மன் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு ராஜராஜேஸ்வரி,ராஜராஜேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக்குழுவினர்கள்,உபயதாரர்கள் செய்திருந்தனர்.

