sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஸ்டம்ஸ் சாலையின் 2ம் கட்ட பணிகள் துவங்குவது எப்போது: விழுப்புரத்திற்கு ஒரு மணி நேரத்தில் செல்ல வாய்ப்பு

/

கஸ்டம்ஸ் சாலையின் 2ம் கட்ட பணிகள் துவங்குவது எப்போது: விழுப்புரத்திற்கு ஒரு மணி நேரத்தில் செல்ல வாய்ப்பு

கஸ்டம்ஸ் சாலையின் 2ம் கட்ட பணிகள் துவங்குவது எப்போது: விழுப்புரத்திற்கு ஒரு மணி நேரத்தில் செல்ல வாய்ப்பு

கஸ்டம்ஸ் சாலையின் 2ம் கட்ட பணிகள் துவங்குவது எப்போது: விழுப்புரத்திற்கு ஒரு மணி நேரத்தில் செல்ல வாய்ப்பு


ADDED : ஜூன் 02, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் ஆல்பேட்டையில் இருந்து, கண்டரக்கோட்டை வரை 2ம் கட்ட கஸ்டம்ஸ் சாலை பணிக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை பணிகள் துவங்காமில் கிடப்பில் உள்ளது.

கடலுாரில் இருந்து பண்ருட்டி வழியாக விழுப்புரம் செல்ல 53 கி.மீ., துாரம் உள்ளது. சொர்ணாவூர், மற்றொரு வழியான வளவனுார், கோலியனுார், விழுப்புரம் செல்ல கூடுதல் நேரமாகிறது. கடலுாரில் இருந்து மாளிகைமேடு வழியாக விழுப்புரம் செல்ல பயண துாரம் 50 கி.மீ., ஆக உள்ளது. இந்த வழித்தடத்தில் அதிக போக்குவரத்து மிகுதி, அதிக பஸ் நிறுத்தம் காரணமாக துாரத்தை கடக்க சராசரியாக 1:30 மணி நேரம் ஆகிறது.

வழியில் உள்ள நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் ஆகிய நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்படுகிறது. அதனால் பயண நேரத்தை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கவும் 10 கி.மீட்டர் துாரம் குறைவாக கஸ்டம்ஸ் சாலை அமைக்க கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பிள்ளையார் சுழி போடப்பட்டது.

கடலுார், ஆல்பேட்டை தென் பெண்ணையாற்று கரையில் இருந்து துவங்கும் சாலை பண்ருட்டி வி.கே.டி., சாலையில் உள்ள கண்டரக்கோட்டை பாலம் அருகே இணைகிறது. பெண்ணையாற்றின் கரையோரத்தில் செல்லும் சாலையின் முதல் கட்டப்பணியில் கடலுார் ஆல்பேட்டையில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வரையில் 16 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை போடப்பட்டது.

இந்த சாலை சொர்ணாவூர் பாலம் அருகே இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை அமைத்தும் மக்களுக்கு முழுமையாக பயன்படவில்லை. சாலையிலும் மிக குறைந்த அளவு போக்குவரத்து மட்டுமே செல்கிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கஸ்டம் சாலை மிகவும் சேதமானது. இவற்றை முழுமையாக சீரமைக்கவும், 2ம் கட்ட பணியை தொடரவும் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார்.

முதல் கட்டப்பணியில் நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் இல்லாததால் உடனடியாக திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 2ம் கட்டப்பணியில் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்தால் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிட முடியும். கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இதற்கு முழு முயற்சி எடுத்தால்தான் 2ம் கட்டப்பணிகள் துவங்கி முடிக்க முடியும்.






      Dinamalar
      Follow us