sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பராமரிப்பில்லாத பூங்கா சீரமைக்கப்படுவது எப்போது?

/

 பராமரிப்பில்லாத பூங்கா சீரமைக்கப்படுவது எப்போது?

 பராமரிப்பில்லாத பூங்கா சீரமைக்கப்படுவது எப்போது?

 பராமரிப்பில்லாத பூங்கா சீரமைக்கப்படுவது எப்போது?


ADDED : ஜன 03, 2026 04:48 AM

Google News

ADDED : ஜன 03, 2026 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: பராமரிப்பில்லாத பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.

வேப்பூர் ஊராட்சியில் பொதுமக்கள் உடற்பயி ற்சி மேற்கொள்ளவும், முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையிலும், ரூ.30 லட்சம் மதிப்பில் கடந்த 2017-18ம் ஆண்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. இங்கு குழந்தைகள் பொழுது போக்கிற்காக விளையாட்டு உபகரணங்கள், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

இந்தநிலையில், பூங்காவை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், நடைப்பயிற்சி தளம் சேதமடைந்துள்ளதுடன், காலி மது பாட்டில்கள் ஆங்காங்கே உடைந்து சிதறிக்கிடக்கின்றன.

உடற்பயிற்சி உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றதால் உடற்பயிற்சி கூடம் காலியாக உள்ளது. மேலும், முதியோ ர்கள், இளைஞர்கள், குழந்தைகள் பூங்காவை பயன்படுத்த விடாமல் ஊராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வி டுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us